உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 20, 2010

பஸ் கண்ணாடி உடைப்பு : பா.ம.க.,வினர் 4 பேர் கைது

சிதம்பரம் : 

              சிதம்பரத்தில் பஸ் கண்ணாடிகள் உடைத்த சம்பவம் தொடர்பாக பா.ம.க.,வைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை தொடர்பாக அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று கடலூர் மாவட்டத்தில் "பந்த்' நடந்தது. 

                  அதை மீறி சிதம்பரம் பகுதியில் இயக்கப்பட்ட பஸ்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். அதில் மந்தக்கரை மற்றும் விபூஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் மூன்று பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து பா.ம.க.,வைச் சேர்ந்த வடக்கு பவழங்குடி பழனிவேல், சிதம்பரத்தை சேர்ந்த சதீஷ், அன்பரசன் மற்றும் கட்டை சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior