உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 20, 2010

சிதம்பரம் சேக்கிழார் மணி மண்டபத்தில் புதுக்கவிதை வடிவில் பெரிய புராணம் நூல் வெளியீட்டு விழா

சிதம்பரம்,:

                  சிதம்பரம் சேக்கிழார் மணி மண்டபத்தில் வடலூர் தேவார நால்வர் தொண்டு பாதை அமைப்பு சார்பில் புதுக்கவிதை வடிவில் நூலாசிரியர் பா.சத்தியமோகன் எழுதிய பெரியபுராணம் நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

                   உ.கேதார தீட்சிதர் வரவேற்றார். பேராசிரியர் ஐ.ஆனந்தநடராஜ தீட்சிதர் தலைமை வகித்தார். மௌனசாமி மடாதிபதி சுந்தரமூர்த்தி சுவாமிகள் நூலை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார். வடலூர் அன்னதான ஆதீனம் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.  எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் சிறப்புரையாற்றினார். விழாவில் வடலூர் ஊரன்அடிகள், உ.ர.உமாநாததீட்சிதர், டாக்டர் பத்மினி கபாலிமூர்த்தி, கயிலைச்செல்வர் செ.கதிரேசன், வெங்கடேச தீட்சிதர்  உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். 

                      நூலாசிரியர் பா.சத்யமோகனுக்கு விழாவில் சேக்கிழார் அடித்தொண்டர் என்ற விருது வழங்கப்பட்டது. பா.சத்யமோகன் ஏற்புரையாற்றினார். இளம்பொறியாளர் ச.அருண்சித்தார்த் நன்றி கூறினார். கவிஞர் பா.முத்துகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior