உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 20, 2010

மாநில அளவிலான நீச்சல் போட்டி: கடலூர் அணி 54 பதக்கம் வென்றது

கடலூர் : 
 
                   தஞ்சாவூரில் நடந்த மாநில நீச்சல் போட்டியில் கடலூர் அணி 25 தங்கம் உட்பட 54 பதக்கங்களை வென்றது. தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தமிழகத்தில் இருந்து 15 அணிகளைச் சேர்ந்த 350 பேர் பங்கேற்றனர். கடலூர் அணி சார்பில் 30 பேர் பங்கேற்றனர். அதில் அக்ஷரா வித்யாஷரம் பள்ளி மாணவர்கள் நாக ராகவேந்திரா ஒரு தங்கம், நவீன் ஒரு தங்கம் ஒரு வெள்ளி, சஞ்சய் பால் தினகர் ஒரு வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்றனர். 

                      பெடிட் செமினார் பள்ளி சுதாமன் ஒரு வெண்கலம், சி.கே.பள்ளி செபா பிராங்களின் ஒரு தங்கம், ஒரு வெண்கலம், நிர்மல்காந்த் ஒரு தங்கம், சூர்ய பிரசாத் ஒரு தங்கம், டேவிஸ் நிரஞ்சன் 3  தங்கம், சுசிந்தர் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், கவுரவ் சேகரன் ஒரு தங்கம், ஹரிணி ஸ்ரீ ஒரு வெள்ளி, பிளஸ்ஸட் மதர் தெரசா பள்ளி ருக்ஷனா 2 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை பெற்றனர்.

                         ஆரோ சைல்டு பள்ளி விமல் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், ஷெர்வின் ஜெகா 2 தங்கம், ஒரு வெள்ளி, கிருஷ்ணசாமி பள்ளி சுதர்ஷன் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், ஜனார்த்தனன் ஒரு வெள்ளி, லதீஷ் ஷரன் ஒரு தங்கம், ஒரு வெண்கலம், பல்ராம் ஒரு தங்கம், மகாத்மா காந்தி இன்டர் நேஷனல் பள்ளி விஜயகுமார் ஒரு வெள்ளி, அர்ஷித்தா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பெற்றனர். 

                          செயின்ட் மேரீஸ் பள்ளி கோடீஸ்வரி 2 தங்கம், புனித அன்னாள் பள்ளி லட்சுமி சுவாதிகா 3 வெள்ளி, ரக்ஷனா ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம், ஏ.ஆர்.எல்.எம்., சுபாஷ் சுந்தரம் 3 தங்கம், ஒரு வெள்ளி, அபிஷேக் ஒரு தங்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் அருணா ஆகியோரை மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பாராட்டினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior