உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 11, 2010

அனந்தபுரி, நிஜாமுதின் ரயில்கள் கடலூர் வழியாக சென்றன

கடலூர்: 

                   திருச்சி அருகே நெல்லை விரைவு ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து அனந்தபுரி, நிஜாமுதின் விரைவு ரயில்கள் கடலூர் வழியாகச் சென்றன. திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நெல்லை விரைவு ரயில் புறப்பட்டது. நேற்று அதிகாலை திருச்சி அடுத்த  வாலாடி அருகே ரயில் தடம் புரண்டது. 

                  இதனால் அந்த வழியே சென்னை செல்ல வேண்டிய அனந்தபுரி மற்றும் நிஜாமுதின் விரைவு ரயில்களை திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் வழியாக விழுப்புரத்திற்கு திருப்பி விடப்பட்டன. அனந்தபுரி விரைவு ரயில் நேற்று காலை 7.50 மணிக்கும், நிஜாமுதின் விரைவு ரயில் காலை 8 மணிக்கும் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை கடந்து சென்றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior