உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 11, 2010

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்களை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                 கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

                   விழுப்புரம்-மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணிகளுக்கு முன்பு இவ் வழியே 30 ரயில்கள் இயக்கப்பட்டன. அப்போது அனைத்து ரயில்களும் திருப்பாதிரிப்பூலியூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றன. தற்போது 15 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டாலும் விரைவு ரயில்கள் நின்று செல்வதில்லை. 

                  இந்நிலையில் திருப்பாதிரிப்புலியூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும், மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும், தற்போது கடலூர் துறைமுகத்தில் இருந்து இயக்கப்படும் திருச்சி பயணிகள் ரயிலை திருப்பாதிரிப்புலியூரில் இருந்து இயக்க வேண்டும், ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

                     திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நுகர்வோர் பாதுகாப்பு பேரவை பொதுச் செயலர் நிஜாமுதீன் தலைமை வகித்தார். தனியார் பேருந்து தொழிற்சங்க செயலர் பண்டரிநாதன், குடியிருப்போர் நலச்சங்க பொதுச்செயலர் எம்.மருதவாணன், தமிழ் தேசிய விடுதலை இயக்க மாநில பொறுப்பாளர் திருமார்பன், வெள்ளி கடற்கரை சிறுவணிக சங்கத் தலைவர் பரிதிவாணன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior