உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 11, 2010

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் முதல் வீடு: முதல்வர் கருணாநிதி ஒப்படைத்தார்

சிதம்பரம் :  

                சிதம்பரம் அருகே, கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த வீட்டை, முதல்வர் கருணாநிதி நேற்று பயனாளியிடம் ஒப்படைத்தார். திருவாரூர் செல்லும் வழியில், முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மாளிகையில் தங்கினார். 

                    நேற்று காலை 9.30 மணியளவில் திருவாரூர் புறப்பட்டார். அப்போது, காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியான குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வல் லம்படுகையில், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார். கடந்த மாதம் 2ம் தேதி, துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த வீடு, தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீட்டை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார். வீட்டை பயனாளி கணேசன் - கஸ்தூரி தம்பதியிடம் ஒப்படைத்து, "வீடு வசதியாக உள்ளதா' எனக் கேட்டார். 

                பின், கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்த விவரங்களை கலெக்டர் சீத்தாராமனிடம் கேட்டறிந்தார்.வல்லம்படுகை ஊராட்சியில் மொத்தம் 595 வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த ஆண்டு 82 வீடுகள் கட்டப்பட உள்ளன. வல்லம்படுகையில் 69, வேலக்குடியில் 13 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. ஒரு வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டும், 10 வீடுகள் முடியும் தருவாயிலும் உள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து, 9.50 மணிக்கு வல்லம்படுகை வந்த முதல்வர், அங்கிருந்து 10.04க்கு புறப்பட்டு திருவாரூர் சென்றார். 

                 முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, பன்னீர்செல்வம், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., ரவிக்குமார், கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன், குமராட்சி சேர்மன் மாமல்லன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ் ணன், வடக்கு மண்டல ஐ.ஜி., ரமேஷ் குடவாலா, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிதம்பரத்தில் இருந்து புறப்பட்ட முதல்வருக்கு, வல்லம்படுகையில் மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.  

பயனாளிஉருக்கம்: 

                    துணை முதல்வர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டு, முதல்வர் கையால் எனக்கு வீடு ஒப்படைக்கப்பட்டது, வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்காத பாக் கியம். ஒவ்வொரு ஆண்டு வெள்ளத்தின் போதும் எனது கூரை வீடு பாதி மூழ்கி விடும். கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தேன்.  இனி எனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. போதுமான அளவில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தரமாக வீடு கட்டிக் கொடுக் கப்பட்டுள்ளது என்று, பயனாளி கணேசன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior