உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 11, 2010

சர்வதேச யோகா போட்டி கடலூர் மாணவிகளுக்கு தங்கம்




கடலூர்: 

                       சர்வதேச யோகாசனப் போட்டியில், கடலூர் சி.கே.பள்ளி மாணவியர் தங்கப் பதக்கம் வென்றனர். சர்வதேச யோகாசனக் குழுமம் மற்றும் இலங்கை யோகாசனக் குழுமம் சார்பில் உலக அளவிலான யோகாசனப் போட்டி, இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் 24, 25ம் தேதிகளில் நடந்தது. இதில், 13 நாடுகளைச் சேர்ந்த 150 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்திய அணி சார்பில் பங்கேற்ற கடலூர் சி.கே.பள்ளி மாணவி மதுமிதா மூன்று தங்கப் பதக்கமும், கவிப்பிரியா இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior