உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 23, 2011

என்.எல்.சி.சார்பில் மின் உற்பத்தியை 1 கோடி யூனிட்டாக அதிகரிக்க நடவடிக்கை

            நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) சார்பில், ஒரு மணிக்கு ஒரு கோடி யூனிட்டாக மின் உற்பத்தியை அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்தார். என்.எல்.சி. நிறுவன தின விழா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏ.ஆர்.அன்சாரி பேசியது:

          உலகின் தலைசிறந்த 500 நிறுவனங்களில் என்.எல்.சி. 59-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நவரத்னா தகுதி பெற்றுள்ள  19-வது நிறுவனம் என்.எல்.சி. ஆகும். அதற்கு உயர்ந்த நிலையான மகாரத்னா நிலையை விரைவில் இந்த நிறுவனம் அடையும். இப்போது மணிக்கு சுமார் 25 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதை ஒரு கோடி யூனிட்டாக அதிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

            இதை மணிக்கு 2 கோடி யூனிட்டாக அதிகரிக்கும் பட்சத்தில் மகாரத்னா இலக்கை அடைய முடியும். 2009-10-ம் நிதியாண்டில் நிறுவனம் ரூ. 1,247 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. பழுப்பு நிலக்கரிக்கு மாற்றாக நிலக்கரியில் இயங்கும் புதிய நிலையங்களை என்.எல்.சி. அமைக்க உள்ளது. இதற்காக நிலக்கரி சுரங்கங்களை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.மிகக் குறைந்த விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தான் இனி நிலைத்து நிற்க முடியும். எனவே உற்பத்தி செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

               நிறுவனத்தின் இயக்குநர்கள் பி.சுரேந்தர் மோகன், ஆர்.கந்தசாமி, கே.சேகர், ஜெ.மகிழ்செல்வன், எஸ்.கே.ஆச்சார்யா உள்ளிட்ட பணியாளர்கள், தொழிற் சங்கங்கள், பொறியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior