உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 23, 2011

வடலூருக்கு சுற்றுலா வந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமி மாயம்

குறிஞ்சிப்பாடி : 

            வடலூருக்கு சுற்றுலா வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றி சிறுமி மாயமானார். 

              ராமநாதபுரம் மாவட்டம், குமுதி செங்கப்படையைச் சேர்ந்தவர் பசுபதி செல்வம். இவரது மகள் சித்திரைச்செல்வி (11). மனநலம் குன்றிய இவர், ராமநாதபுரம் வடக்கு ரத வீதியில் உள்ள செஸ்ட் ஏஞ்சலின் மூளை வளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் படித்து வருகிறார். இப்பள்ளியை நடத்தி வரும் பானுமதி (41), கடந்த 6ம் தேதி தனது பள்ளியில் படிக்கும், 12 மாணவர்களுடன் சுற்றுலாவிற்கு புறப்பட்டார். கடந்த 14ம் தேதி கடலூர் மாவட்டம், வடலூரில் சத்திய ஞானசபையைப் பார்த்துவிட்டு பஸ் நிலையத்திற்கு வரும் வழியில், சித்திரைச்செல்வி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பானுமதி கொடுத்த புகாரின் பேரில், வடலூர் போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன சிறுமி சித்திரைச்செல்வியை தேடிவருகின்றனர்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior