உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 23, 2011

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலைவிபத்தில் மரணம்


         
             
  திருச்சி அருகே நடந்த சாலைவிபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். பெரம்பலூர், பாடாலூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலைவிபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். சட்டசபை உறுப்பினராக இன்று பதவி ஏற்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
             இந்நிலையில், வேறொரு காரில் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவபதியும் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். கால் மணி நேர இடைவெளியில் அவர் யதேச்சையாக விபத்துக்கு உள்ளான மரியம் பிச்சையின் காரைக் கண்டு நிறுத்தி உதவியுள்ளார். உடனடியாக அடுத்த கட்ட ஏற்பாடுகளைச் செய்ய, அங்கிருந்து அவர் திருச்சி திரும்பினார். ஆனால், சிவபதியின் காரும் விபத்துக்கு உள்ளானதாக காலையில் தகவல் பரவியது. 
 
           இந்நிலையில், சட்டப்பேரவை செயலர் மற்றும் அதிகாரிகள் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று காலை தொடங்கவிருக்கும் சட்டசபைக் கூட்டத்தை நடத்துவது குறித்தும், சாலைவிபத்தில் பலியான அமைச்சர் மரியம்பிச்சைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு எம்.எல்.ஏக்கள் பதவியேற்பைத் தொடர்ந்து நடத்தலாமா அல்லது வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior