உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 26, 2011

கடலூர் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரைவில் ஆலோசனை: ஊரகத் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூர்:

               கடலூர் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இந்த மாவட்டத்தின் மற்றொரு அமைச்சரான செல்வி ராமஜெயத்துடன் சேர்ந்து, அலுவலர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்று ஊரகத் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை கடலூர் வந்த அமைச்சர் சம்பத் கூறியது: 

           டலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த, வாக்காளர்களுக்கு நன்றி.  மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, அமைச்சர் செல்வி ராமஜெயத்துடன் சேர்ந்து, விரைவில் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி விவாதிக்கப்படும். முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அடித்தட்டு மக்களை விரைவில் சென்றடையும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பிரதான திட்டங்களை விரைந்து முடிக்க, சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் விரைவில் பேசுவேன் என்றார் அமைச்சர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior