உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 26, 2011

பெளத்தர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக் கோரிக்கை

பண்ருட்டி:

             பௌத்தர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு புத்திஸ்ட் சொசைட்டி-புத்தபூமி பாசறை கோரிக்கை விடுத்துள்ளது.

             இந்த அமைப்பின் சார்பில் புத்தரின் 2600-வது பிறந்த நாள் விழா கீழ்கவரப்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை நடந்தது. புத்த பூமி பாசறை நிறுவனர் என்.வி.ஜெயசீலம் தலைமையில் விழா நடைபெற்றது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கும், அமைச்சர்களாக பதிவியேற்றுக்கொண்ட எம்.சி.சம்பத், செல்வி ராமஜெயம், பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினர் பி.சிவக்கொழுந்து ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. 

             பெளத்தர்களுக்கென தனி நலவாரியம் அமைக்க வேண்டுவது, மனித இனத்தை சீரழைக்கும் போதை பொருள்கள் மற்றும் மதுவை ஒழித்து தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என அரசை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விழாவில் உலக பெüத்த சங்க செயலர் எச்.எல்.விருத்தி (லண்டன்), முன்னாள் சிறுபான்மை குழு உறுப்பினர் பிக்கு அசுவகோஷ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி, முன்னாள் பதிவுத் துறை அதிகாரி டி.கே.ராஜா, பிரசார செயலர் எம்.அரங்கநாதன், தலைவர் செüந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுச் செயலர் எஸ்.வி.புத்தப்பிரியன் நன்றி கூறினார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior