உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 27, 2009

300 பட​கு​கள் மீன்​பி​டிக்​கச் செல்​ல​வில்லை

கட ​லூர்,​ நவ. 26:​

கட​லூர் அருகே தாழங்​கு​டா​வைச் சேர்ந்த 50-க்கும் மேற்​பட்ட மீன​வர்​கள்,​ இந்​திய கடற்​ப​டை​யி​ன​ரால் தாக்​கப்​பட்ட சம்​ப​வம் தொடர்​பாக,​ வியா​ழக்​கி​ழமை மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன்,​ சட்​டப் பேரவை உறுப்​பி​னர் கோ.அய்​யப்​பன் ஆகி​யோர் சம்​பந்​தப்​பட்ட கிரா​மத்​துக்​குச் சென்று சமா​தா​னப் பேச்சு நடத்​தி​னர்.÷தா​ழங்​கு​டா​வைச் சேர்ந்த மீன​வர்​கள் 100 பேர் 20 பட​கு​க​ளில்,​ செவ்​வாய்க்​கி​ழமை,​ வங்​கக் கட​லில் வழக்​க​மாக மீன்​பி​டிக்​கும் பாறைப் பகு​தி​யில் வஞ்​ச​ரம் மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்​த​னர். காலை 10 மணி அள​வில் இந்​திய கடற்​ப​டை​யி​னர் ஒரு கப்ப​லில் அங்கு வந்​த​னர். அதில் இருந்து இறங்கி பட​கு​க​ளுக்கு வந்த சிப்​பாய்​கள்,​ மீன​வர்​களை அணுகி அடை​யாள அட்டை இருக்​கி​றதா பட​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு இருக்​கி​றதா 12 மைல் தூரத்​துக்கு அப்​பால் ஏன் வந்​தீர்​கள் என்று கேட்டு மிரட்டி,​ தடி​யால் சர​மா​ரி​யா​கத் தாக்​கி​னர். இதில் 50க்கும் மேற்​பட்ட மீன​வர்​கள் காயம் அடைந்​த​னர். ​÷பு ​தன்​கி​ழ​மை​யும் அதே பகு​தி​யில் மீன்​பி​டிக்​கச் சென்ற மீன​வர்​கள் இந்​தி​யக் கடற்​ப​டை​யி​ன​ரால் விரட்​டி​ய​டிக்​கப்​பட்​ட​னர். இத​னால் பாதிக்​கப்​பட்ட மீன​வர்​கள் ரூ. 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மதிப்​புள்ள வலை​களை அப்​ப​டியே போட்​டு​விட்டு கரை திரும்பி உள்​ள​னர். மீன் வலை​கள் கடற்​ப​டை​யி​ன​ரால் சேதப்​ப​டுத்​தப்​பட்டு இருக்​க​லாம் என்ற அச்​சம் மீன​வர்​கள் மத்​தி​யில் உள்​ளது. 3 நாள்​க​ளாக தாழங்​குடா மீன​வர்​க​ளுக்கு தொழில் தடை​பட்​டது. ​÷இச்​சம்​ப​வம் கட​லூர் மாவட்ட மீன​வர்​க​ளி​டையே கடும் அச்​சத்தை ஏற்​ப​டுத்தி இருக்​கி​றது. இத​னால் வியா​ழக்​கி​ழமை தாழங்​கு​டா​வைச் சேர்ந்த 300 பட​கு​க​ளில் 250 பட​கு​கள் மீன்​பி​டிக்​கச் செல்​ல​வில்லை. இந்​தி​யக் கடற்​ப​டை​யின் செய​லுக்​குக் கண்​ட​னம் தெரி​வித்து சில வீடு​க​ளில் கருப்​புக் கொடி ஏற்​றப்​பட்டு இருந்​தது. கட​லூர் நக​ரில் சுவர்​க​ளி​லும் பஸ்​க​ளி​லும் கண்​ட​னச் சுவ​ரொட்​டி​கள் ஒட்​டப்​பட்டு இருந்​தன. மீன​வக் கிரா​மங்​கள் ஒன்​று​கூடி வியா​ழக்​கி​ழமை கூட்​டம் நடத்தி நட​வ​டிக்கை எடுக்​கத் திட்​ட​மிட்டு இருந்​த​னர். ​÷இந்த நிலை​யில் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன்,​ கட​லூர் எம்.எல்.ஏ. கோ.அய்​யப்​பன்,​ மாவட்​டக் காவல் கண்​கா​ணிப்​பா​ளர் அஸ்​வின் கோட்​னீஸ் ஆகி​யோர் தாழங்​குடா கிரா​மத்​துக்​குச் சென்​ற​னர். அங்​குள்ள மீன​வர்​க​ளைச் சந்​தித்​துப் பேசி​னர். நடந்த சம்​ப​வத்​துக்கு கடற்​படை அதி​கா​ரி​கள் வருத்​தம் தெரி​வித்​த​தா​கக் கூறி​னர். எனி​னும் மீன​வர்​கள் சமா​தா​னம் அடை​ய​வில்லை. மீன​வர்​க​ளுக்​குக் கட​லில் மீன்​பி​டிக்க எல்லை வகுப்​பதை ஏற்க முடி​யாது என்று தெரி​வித்​த​னர். மேலும் மீன​வர்​க​ளுக்கு அடை​யாள அட்​டை​களை அர​சு​தான் வழங்க வேண்​டும் என்​றும் வலி​யு​றுத்​தி​னர். இந்​திய கடற்​ப​டையே எங்​களை அன்​னி​யர்​கள்​போல் தாக்​கு​வதை ஏற்க முடி​யாது என்​றும் கூறி​னர். ​

இப்​பி​ரச்​சினை தொடர்​பாக அனைத்து மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​க​ளு​டன் பேசு​வ​தாக மாவட்ட ஆட்​சி​யர் தெரி​வித்து விட்டு கட​லூர் திரும்​பி​னார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior