உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 27, 2009

ரூ.500 லஞ்​சம்: அரசுப் பள்ளி ஆசி​ரி​யர் கைது

​ கட​லூர்,​ நவ. 26:​

ரேஷன் கார்டை ஆய்வு செய்​வ​தற்கு ரூ.500 லஞ்​சம் வாங்​கி​ய​தாக,​ அர​சுப் பள்ளி ஆசி​ரி​யர் மணி​ரத்​தி​னம் என்ற சூசை ​(49) வியா​ழக்​கி​ழமை கைது செய்​யப்​பட்​டார். ​

க​ட​லூர் மாவட்​டத்​தில் உரிய முக​வ​ரி​யில் இல்​லாத குடும்ப அட்​டை​தா​ரர்​க​ளின் கார்​டு​கள் போலிக் கார்​டு​கள் என்று கண்​ட​றி​யப்​பட்டு,​ விசா​ர​ணை​யில் வைக்​கப்​பட்டு உள்​ளன. இந்​தக் கார்​டு​க​ளின் உண்​மைத் தன்மை கண்​ட​றிய ஆய்வு நடத்​தப்​பட்டு வரு​கி​றது. இப்​ப​ணி​யில் ஆசி​ரி​யர்​க​ளும் ஈடு​ப​டுத்​தப்​பட்டு உள்​ள​னர்,​ கட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் அர​சி​னர் மக​ளிர் மேல்​நி​லைப் பள்ளி ஆசி​ரி​யர் மணி​ரத்​தி​னம் என்ற சூசை​யும் இப்​ப​ணி​யில் அமர்த்​தப்​பட்டு இருந்​தார்.÷அ ​வர் கட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் சின்​ன​வா​ணி​யர் தெரு​வில் கடை வைத்து இருக்​கும்,​ நேமி​சந்த் ஜெயின் ரேஷன் என்​ப​வ​ரின் ரேஷன் கார்டை புதுப்​பிக்க ரூ.500 லஞ்​சம் கேட்​டா​ராம். மேலும் அவ​ரது கடை​யில் உள்ள ஸ்டே​ஷ​னரி பொருள்​க​ளை​யும் இல​வ​ச​மா​கப் பெற்​றுச் சென்​றா​ராம்.

இ ​து​கு​றித்து நேமி​சந்த் ஜெயின் கட​லூர் மாவட்ட லஞ்ச ஒழிப்​புப் போலீ​ஸ​ரி​டம் புகார் செய்​தார். லஞ்ச ஒழிப்​புப் போலீஸ் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் வேத​ரத்​தி​னம் வழக்​குப் பதிவு செய்து,​ ஆசி​ரி​யர் மணி​ரத்​தி​னம் என்ற சூசை​யைக் கையும் கள​வு​மா​கப் பிடிக்க உத்​த​ர​விட்​டார். வியா​ழக்​கி​ழமை ஆசி​ரி​யர் மணி​ரத்​தி​னம் தனது வீட்​டில் இருந்​தார் அவ​ரி​டம் நேமி​சந்த் ஜெயின் ரூ.500 லஞ்​சம் கொடுக்​கும்​போது,​ மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்​புப் போலீ​ஸôர் விரைந்து சென்று கைது செய்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior