உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 27, 2009

மார்க்​சிஸ்ட் கண்​ட​னம்

​ கட​லூர்,​ நவ. 26:​

கட​லூர் மீன​வர்​களை இந்​தி​யக் கடற்​படை தாக்​கி​ய​தற்கு மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி கண்​ட​னம் தெரி​வித்து உள்​ளது. ​

அக்​கட்​சி​யின் கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் டி.ஆறு​மு​கம் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ கட​லில் மீன்​பி​டிக்​கச் சென்ற தாழங்​குடா மீன​வர்​கள் 50க்கும் மேற்​பட்​ட​வர்​களை இந்​திய கடற்​ப​டை​யி​னர் தாக்கி உள்​ள​னர். மீன்​க​ளை​யும் வலை​க​ளை​யும் விட்​டு​விட்டு தப்​பிப் பிழைத்​துக் கரை சேர்ந்து உள்​ள​னர். இத் தாக்​கு​தலை மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி வன்​மை​யா​கக் கண்​டிக்​கி​றது. மத்​திய அரசு உடனே தலை​யிட்டு மீன​வர்​க​ளின் வாழ்​வா​தா​ரங்​க​ளை​யும்,​ உரி​மை​க​ளை​யும்,​ பாது​காக்க நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். ​÷மத்​திய அரசு கொண்​டு​வர இருக்​கும் கடல் மீன் தொழில் ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்​தில் மீன​வர்​க​ளின் உரி​மை​க​ளைக் கடு​மை​யா​கப் பாதிக்​கும் பல்​வேறு சரத்​து​கள் இடம்​பெற்று உள்​ளன. இச்​சட்​டம் நடை​மு​றைக்கு வரும் முன்பே கட​லோ​ரக் காவல் படை​யி​னர் அத்​து​மீறி முறை​யான விசா​ர​ணை​யின்றி,​ மீன​வர்​க​ளைத் தாக்கி இருப்​பது வேதனை அளிக்​கி​றது. ​

க​டல் வளத்​தை​யும்,​ மீனவ மக்​க​ளின் உரி​மை​க​ளை​யும் வாழ்​வா​தா​ரத்​தை​யும் பாதிக்​கும் கடல் மீன் தொழில் ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்தை எதிர்த்​துக் குரல் கொடுக்க அனைத்​துப் பகுதி மக்​க​ளும் அணி திரள வேண்​டும் என்று கேட்​டுக் கொள்​கி​றோம் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior