உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 27, 2009

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் விரைவில் கட்டண முறை அமல்படுத்தப்படும்

சிதம்பரம், நவ. 26:

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் விரைவில் அர்ச்சனை, சிறப்பு தரிசனம் மற்றும் அபிஷேகம் உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் விதிப்பது குறித்தும், பூஜை செய்பவர்களுக்கு எவ்வளவு பங்கு உள்ளிட்டவை குறித்து அறநிலையத்துறை அலுவலர்களால் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண விதிப்பு முறை வருகிற மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழா முதல் அமல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ந.திருமகள் தெரிவித்தார்.சிதம்பரம் நடராஜர் கோயிலில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:


கோயிலில் வியாழக்கிழமை மேலும் 5 உண்டியல்கள் வைக்கப்படவிருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீபத்துக்குப் பிறகு நடராஜர் கோயிலில் மேலும் 5 உண்டியல்கள் வைக்கப்படும். தேங்காய் பழக்கடைகள் ஏலம் போகாததால் அறநிலையத் துறை சார்பில் அக்கடைகள் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆலயத்தில் பூஜை செய்யும் பொது தீட்சிதர்கள் ஆலய செயல் அலுவலர் அலுவலகத்தில் தங்களது பெயர் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என ந.திருமகள் தெரிவித்தார்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior