உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 27, 2009

சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதக் கடை ரூ.7.56 லட்சத்துக்கு ஏலம்

சிதம்பரம், நவ. 26:

சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் 3-ம் பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயில்களில் பிரசாதக் கடை அமைத்து நடத்தவும், கிழக்கு நுழைவு வாயிலில் தேங்காய் பழக்கடை, மேற்கு நுழைவு வாயிலில் தேங்காய், பழக்கடை வைத்து நடத்தவும் வியாழக்கிழமை ஏலம் நடைபெற்றது.÷அறநிலையத்துறை இணை ஆணையர் ந.திருமகள் முன்னிலையில் உதவி ஆணையர் ஆர்.ஜெகந்நாதன், செயல் அலுவலர்கள் கிருஷ்ணகுமார், கே.சிவக்குமார் ஆகியோர் ஏலத்தை நடத்தினர்.÷பிரசாதக் கடை ஏலம் எடுக்க 12 பேர் டெபாசிட் கட்டி வந்தனர். தேங்காய் பழக்கடை ஏலம் எடுக்க 2 பேர் வந்திருந்தனர்.÷பிரசாதக் கடைக்கு தேவஸ்தானத்தின் குறைந்தபட்ச மதிப்பான ரூ.5 லட்சம் கேள்வியிலிருந்து ஏலம் தொடங்கப்பட்டது. ஆனால் இத்தொகையை உயர்த்தி கேட்க யாரும் முன்வரவில்லை. இதனால் ஏலத்தொகை படிப்படியாக குறைக்கப்பட்டது. அப்போதும் ஏலத்தொகை ரூ.2 லட்சம் வரை ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. அதேபோன்று கிழக்கு நுழைவுவாயில் மற்றும் மேற்கு நுழைவு வாயிலில் தேங்காய் பழக்கடைகள் 2-க்கும் தேவஸ்தான மதிப்பு ரூ.50 ஆயிரத்திலிருந்து கேள்வி தொடங்கப்பட்டது. ரூ.20 ஆயிரம் வரை ஏலம் மதிப்பு குறைக்கப்பட்டு ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.

பின்னர் டெண்டர் பெட்டியை திறந்ததில் ஆலயத்தின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயிலில் பிரசாதக் கடைகள் நடத்த ரூ.7.56 லட்சத்துக்கு புவனகிரி வடக்கு திட்டையைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவர் டெண்டர் போட்டிருந்தார். அதிகபட்ச தொகையாக அவர் டெண்டர் கோரியதால் அவருக்கு ஏலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தேங்காய் பழக்கடைகளுக்கான ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior