உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 27, 2009

குடும்ப வன்​முறை வழக்​கு​க​ளில் விரை​வில் தீர்வு

கட ​லூர்,​ நவ. 26:​

குடும்ப வன்​முறை தொடர்​பான வழக்​கு​க​ளில்,​ விரை​வில் தீர்வு காண வேண்​டும் என்று கட​லூ​ரில் நடந்த பெண்​க​ளுக்கு எதி​ரான வன்​முறை எதிர்ப்பு மாநாட்​டில் கோரிக்கை விடப்​பட்​டது.÷

அ​னைத்​ திந்​திய ஜன​நாய மாதர் சங்​கம் சார்​பில் இந்த மாநாடு கட​லூ​ரில் புதன்​கி​ழமை நடந்​தது. மாநாட்​டில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​÷

கு டும்ப வன்​முறை சட்​டம் 2005-ல் அம​லுக்கு வந்​தது. 2007 முதல் இது​வரை தொட​ரப்​பட்ட வழக்​கு​க​ளில் இன்​ன​மும் தீர்வு காணப்​ப​ட​வில்லை. எனவே குடும்ப வன்​முறை தொடர்​பான வழக்​கு​க​ளில் விரை​வில் தீர்வு காண நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். ​

வி​ருத்​தா​ச​லம் வட்​டம் ஆவட்​டி​யில் இளம் பெண் கலைச்​செல்வி,​ குடும்ப வன்​மு​றை​யால் எரித்​துக் கொல்​லப்​பட்​டார். இது​வரை குற்​ற​வாளி கைது செய்​யப்​ப​டா​தது கண​டிக்​கத் தக்​கது. விரை​வில் குற்​ற​வா​ளி​யைக் கைது செய்ய வேண்​டும். கட​லூர் மாவட்​டத்​தில் சிறு​மி​யர் மீதான பாலி​யல் பலாத்​கார சம்​ப​வங்​கள் அதி​க​ரித்து வரு​வது கவலை அளிக்​கி​றது. இது​கு​றித்து போலீ​ஸôர் கடு​மை​யான நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். சிறு​வர் மீதான வன்​கொ​டுமை தடுப்​புச் சட்​டம் குறித்து மக்​க​ளி​டையே விழிப்​பு​ணர்வை ஏற்​ப​டுத்த வேண்​டும் என்று கோரும் தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப் பட்​டன.÷மா ​நாட்​டுக்கு அனைத்​திந்​திய ஜன​நாய மாதர் சங்க கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் வி.மேரி தலைமை தாங்​கி​னார்., மாவட்ட நிர்​வா​கி​கள் எம்.மனோ​ரஞ்​சி​தம்,​ பி.சிவ​காமி,​ எஸ்.லட்​சுமி எஸ்.சந்​திரா உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​த​னர். ​ ​

மா​வட்ட ஊராட்​சித் தலைவி இரா.சிலம்​புச்​செல்வி தொடங்கி வைத்​துப் பேசி​னார். குடும்ப வன்​முறை தொடர்​பான வழக்​கு​க​ளைத் தொகுத்து மாவட்​டத் தலை​வர் எஸ்.வாலண்​டீனா பேசி​னார். மாநி​லச் செய​லா​ளர் ஜோதி​லட்​சுமி,​ சக்கி குடும்ப நல ஆலோ​சனை மைய நிர்​வாகி கோடீஸ்​வ​ரன்,​ சிதம்​ப​ரம் நக​ராட்​சித் தலை​வர் பெüஜி​யா​பே​கம்,​ கோண்​டூர் ஊராட்சி மன்​றத் தலை​வர் சுஜாதா ராமச்​சந்​தி​ரன் உள்​ளிட்ட பலர் பேசி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior