உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் குருபெயர்ச்சி மகா யாகம்


சிதம்பரம் :

              குருபெயர்ச்சியையொட்டி சிதம்பரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மகா யாகம் நடந்தது.
 
                குருபெயர்ச்சியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில், இளமையாக்கினார் கோவில், அனந்தீஸ்வரன் கோவில் களில் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.சிதம்பரம் மேல வீதி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வேத பாஸ்கர மகாயக்ஞ மண்டலி சார்பில் மகா யாகம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி பகல் 10.30மணிக்கு மகா சங்கல்பம் நடந்தது. மாலை 6மணிக்கு தேவாரம் திருவாசகம், 7மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, நவக்கிரக குருமந்திர ஜபம், இரவு மகா நிவேதனம், தீபாராதனை நடந்தது.நேற்று காலை குருமந்திர ஜப பாராயணம், திருமுறை பாராயணம், குருமந்திர மகாயாகம், ருத்ர ஹோமம், வசோத் தாரா ஹோமம், மகா பூர்ணாஹீதியும் 12மணிக்கு தீபாராதனையும் நடந்தது. வேம்பு தீட்சிதர் தலைமையில் சம்பந்த தீட்சிதர் உள்ளிட்ட குழுவினர் யாகம் நடத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior