உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 18, 2010

மாவட்ட இறகுப்பந்து போட்டி : கடலூர் பள்ளி மாணவி சாதனை

கடலூர் : 

                 மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத் தில் சிகப்பி ஆச்சி நினைவு மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. அதில் மகளிர் பிரிவில் 13, 16 மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவிலும், 13 வயதிற்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவிலும் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவி சோபிகா நான்கு சாம்பியன்ஷிப் பட்டங்களை பெற்றார். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ராம்குமார் 16 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தார். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற இருவரையும் பள்ளி தாளாளர் ராஜேந்திரன், முதல்வர் நடராஜன் ஆகியோர் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior