உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 18, 2010

ரயில் மோதி முதியவர் சாவு

கடலூர் : 

                            கடலூரில் ரயில் மோதி முதியவர் இறந்தார்.கடலூர் தானம் நகரைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி(65). இவர் நேற்று மதியம் கம்மியம்பேட்டை அருகே தண்டவாளத்தை கடந்த போது அவ்வழியாக சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மண்ணாங்கட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார். தகவலறிந்த முதுநகர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மண்ணாங்கட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிதம்பரம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior