உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 30, 2010

விருத்தாசலம் அருகே கேலி செய்ததால் தகராறு: 18 பேர் மீது வழக்குப்பதிவு


விருத்தாசலம்:

           விருத்தாசலம் அருகே இரு பிரிவினரிடையே ஏற் பட்ட தகராறில் 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் கீர்த்தனா (14). நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றபோது அதே ஊரை சேர்ந்த சிவசங்கரன் மகன் செந்தமிழ் கீர்த்தனாவை கிண்டல் செய்துள்ளார். இதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி சிவசங்கரனிடம் கூறினார். அதற்கு சிவசங்கரன் மற்றும் அவரது உறவினர் கிருஷ்ணமூர்த்தியை திட்டி தாக்கியுள்ளனர். பின்னர் சிவசங்கரனின் உறவினர்கள் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு கொட்டகைக்கு தீ வைத்தனர்.

                 இதுகுறித்து முத்தம் மாள் கொடுத்த புகாரின் பேரில் முருகவேல், கலியபெருமாள், தங்கவேல், ராஜசேகர், விஸ்வநாதன், பார்த்திபன், ராமச்சந்திரன், சண்முகம், சக்திவேல், சிவராமன் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அதேபோல் செந்தமிழுக்கும், கிருஷ்ணமூர்த்தி மகன் அருளுக்கும் பள்ளியில் தகராறு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன்கள் அருள், அரவிந்த், அயோத்தி, முருகவேல், வேல்மணி, பழனி சேர்ந்து, பள்ளி முடிந்து நிலத்திற்கு சென்று கொண்டிருந்த செந்தமிழனிடம் தகராறு செய்து மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக செந்தமிழனின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏழு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசார ணை செய்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior