உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 30, 2010

நெல்லிக்குப்பம் ரேஷன் கடையில் டி.ஆர்.ஓ., ஆய்வு

நெல்லிக்குப்பம்:

          நெல்லிக்குப்பத்தில் ரேஷன் கடைகளில் டி.ஆர்.ஓ., நடராஜன் திடீரென ஆய்வு செய்தார். 

                    நெல்லிக்குப்பத்தில் இரண்டு ரேஷன் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் திடீரென ஆய்வு செய்தார். கணக்கு புத்தகங்கள், எடை தராசு சரியாக உள்ளதா என பார்த்தார். புத்தகத்தில் உள்ள இருப்பு அளவுக்கு பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்தார். கணக்கில் இருப்பதைவிட குறைவான இருப்பு அளவு பொருட்களுக்கு அபராதம் விதித்தார். சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டுமென கூறினார். அரசினர் ஆண்கள், பெண்கள் விடுதியை பார்வையிட்டு உணவு தரமாக உள்ளதா என சுவைத்து பார்த்தார். சோழவல்லி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்று முதியோர் உதவித்தொகை சரியாக வழங்கப்படுகிறதா எனக் கேட்டறிந்தார். ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலரும் கட்டாயம் இருபது மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண் டும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior