உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 30, 2010

கடலூர் சிறையில் கைதிகள் மோதல்


கடலூர்:

            கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக் குள் ஏற் பட்ட மோதலில் மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

               புதுச்சேரி முதலியார் பேட்டை ரமேஷ் (37), சேலம் ஜியாவுதீன்(37), பாருகான் (37) மூவரும் வழிப்பறி, திருட்டு வழக்குகளில் விசாரணை கைதிகளாக கடலூர் மத்திய சிறையில் உள்ளனர். இவர்கள் நேற்று மாலை சிறை வளாகத்தில் டீ குடித்து கொண்டிருந்த போது சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர். ஆயுள் தண்டனை கைதியாக உள்ள சீர்காழி அடுத்த வானகிரியைச் சேர்ந்த சந்திரன் (எ) நடுப்பிள்ளை (55) ஏன் சத்தமாக பேசுகிறீர்கள் என கேட்டதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரமேஷ், ஜியாவுதீன், பாருகான் ஆகியோர் சந்திரனை சரமாரியாக தாக்கினர். பணியில் இருந்த சிறைக் காவலர்கள் மோதலை தடுத்து சமரசம் செய்தனர். சிறை அலுவலர் வேணுகோபால் புகாரின் பேரில் முதுநகர் போலீசார், ரமேஷ், ஜியாவுதீன், பாருகான் ஆகியோர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior