உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 30, 2010

சிதம்பரத்தில் காணாமல்போன துப்பாக்கிகுறித்து போலீஸ் விசாரணை


சிதம்பரம்: 

           சிதம்பரத்தில் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன துப்பாக்கி குறித்து சந்தேகத்தின் பேரில் தீட்சிதர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

               பெங்களூரு இந்திரா நகர் கொடிகல்லியைச் சேர்ந்தவர் லட்சுமிபதி(39). தொழிலதிபர். இவர் பெங்களூரு மாத இதழின் ஆசிரியராகவும் உள்ளார். ஜனவரி மாதம் 6ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி கும்பிட தனது மனைவியுடன் வந்தார். அப்போது தனது மனைவி கை பையில் துப்பாக்கியை வைத்து விட்டு சாமி கும்பிட்டு திரும்பி பார்த்தபோது பையில் இருந்த துப்பாக்கி காணவில்லை. பின் பெங்களூரூ சென்றவர் ஜனவரி மாதம் 11ம் தேதி கர்நாடகா மாநில ஐகோர்ட் வக்கீல் மூலம் சிதம்பரம் போலீசில் புகார் செய்தார்.சிதம்பரம் போலீசார் விசாரித்து வந்தனர். சிதம்பரம் கீழவீதி தீட்சிதர் ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் நேற்று போலீசார் விசாரித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior