உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 30, 2010

நரேஷ் குப்தா உள்பட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஓய்வு



             தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உள்பட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர்.  வேளாண் துறைச் செயலாளர் நந்த கிஷோர், மத்திய அரசுப் பணியில் உள்ள சாந்தா ஷீலா நாயர், தொழில் மற்றும் வர்த்தத் துறை ஆணையர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் ஓய்வு பெறவுள்ள மற்ற அதிகாரிகளாவர்.
 
தேர்தல் அதிகாரி: 
 
               ஓய்வு பெறும் அதிகாரிகளில் நரேஷ் குப்தா குறிப்பிடத்தக்கவர். தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர். அவரது பணிக் காலத்தில் 10-க்கும் மேற்பட்ட இடைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். முதல்வர் உள்பட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் கண்டனக் கணைகளுக்கு ஆளானாலும் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வந்தவர். 
 
தேர்தலில் புதிய யுக்திகள்: 
 
                      வாக்குப் பதிவின் போது பல்வேறு புதிய யுக்திகளை தமிழகத்தில் புகுத்தியவர் நரேஷ் குப்தா.  வாக்குப் பதிவின் போது நடைபெறும் நிகழ்வுகளை வெப்கேமராவில் படம் பிடிப்பது, வாக்காளிக்க வருவோரை படமெடுத்து அதை வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குப்பதிவு நிலவரங்களை வாக்குச் சாவடி அதிகாரிகள் மணிக்கு ஒருமுறை தெரிவிக்கச் செய்வது போன்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior