உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 17, 2010

ரூ.5 லட்சம் கேட்டு வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண் சித்ரவதை; கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

கடலூர்:
 
            கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்த வர் தண்டபாணி. இவரது மகள் மஞ்சுளா (வயது 22). இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த என்ஜினீயர் சரவணனுக்கும் கடந்த 2 1/2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சரவணன் மும்பை அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

                 திருமணம் முடிந்ததும் மனைவியை அவர் மும்பைக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் மஞ்சுளா மும்பையிலிருந்து கடலூர் வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் ரூ.5 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படி மும்பையில் வீட்டில் அடைத்து வைத்து தனது கணவர் சரவணன் சித்ரவதை செய்ததாகவும் அவருக்கு சரவணனின் தாய் ஞானசவுந்தரி, அண்ணன் மாணிக்கவாசகம், அக்காள் மாரிதேவி ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறியிருந்தார்.

 
               இதையடுத்து அந்த மனு கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து சரவணன், ஞானசவுந்தரி, மாணிக்கவாசகம், மாரிதேவி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior