உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 17, 2010

கைவினைஞர் முன்னேற்றக் கழகம் கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

             விஸ்வகர்ம சமூகத்தினரை மிகவும் பிற்பட் டோர் பட்டியலில் சேர்க் கக் கோரி கடலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

               தமிழகத்தில் உள்ள கருமார், கன்னார், சிற்பி, தச்சர், பொற்கொல்லர் தொழில் செய்யும் விஸ்வ கர்ம சமூகத்தினரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து, வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும். ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கடலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கடலூர் உழவர் சந்தை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

             ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சக்திவேல், சிற்ப பிரிவு செயலாளர் யாகமூர்த்தி, நகர தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். நிறுவன பொதுச் செயலாளர் சிவக்குமார் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலா ளர் பாலு, அவைத் தலைவர் நடராஜன், மாநில இளைஞரணி செயலாளர் பழனிவேல், மாணவரணி செயலாளர் உமாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior