உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 17, 2010

அண்ணா பல்கலை.யில் ​ தமிழ் தேடல் பொறி அறிமுகம்

           சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் தேடல் பொறி முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக தமிழ்க் கணிம ஆய்வகம் உருவாக்கிய இந்த தேடல் பொறியை,​​ பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தொடங்கி வைத்தார்.​ இத்துடன் அகராதி டாட் காம் என்ற இணைய தளமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இதுகுறித்து, ​​ தமிழ்க் கணிம ஆய்வக ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் கீதா,​​ ரஞ்சனி பார்த்தசாரதி,​​ மதன் கார்க்கி ஆகியோர் வெள்ளிக்கிழமை கூறியது:

                கூகுல் போன்ற தேடல் பொறிகள் சொல் சார்ந்த தேடல் பொறிகளாகும்.​ ஆனால்,​​ இப்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் கோரி என பெயரிடப்பட்டுள்ள தமிழ் தேடல் பொறி,​​ இணைய பக்கங்களில் உள்ள உரைகளை ஆராய்ந்து அதன் பொருளை மட்டும் தன் சுட்டு வரிசையில் சேமித்துக் கொள்கிறது. உரைகளில் உள்ள பொருள்களையும்,​​ அப்பொருள்களிடையே உள்ள உறவையும் அறிவதன் மூலம்,​​ தேடும் கோப்புகளை விரைவில் அடைய வழி செய்கிறது. அகராதி டாட் காம் என்ற இணைய தளம் ஒரு இலவச தமிழ் அகராதி ஆகும்.​ இது சொல் பகுப்பான்,​​ சொல் உருவாக்கி,​​ பிழை திருத்தம்,​​ மாற்றுச் சொற்கள்,​​ சொற்களின் இனிமை மதிப்பெண்,​​ சொற்களின் பயன்பாட்டு மதிப்பெண்,​​ திருக்குறள் பயன்பாடு,​​ பாரதி மற்றும் ஒளவை பாடல்களில் சொற்களின் பயன்பாடு,​​ 15 இலக்க எண்கள் வரை ​சொற்றொடர்களாக மாற்றுதல் உள்பட 20 சேவைகளை வழங்கும் என்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior