உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 17, 2010

ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா

ஸ்ரீமுஷ்ணம் : 

            ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா செய்தனர்.

              ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்தை சேர்ந்த ராமாபுரம், கொளத்தங்குறிச்சி, வாலீஸ்பேட்டை, தண்டகாரங்குப்பம் கிராமங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக ஜாதி, வருமான, இருப்பிடச்சான்று கேட்டு ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ.,) அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு கொடுத்தனர்.

               மனுவைப் பெற்றுக் கொண்ட ஆர்.ஐ., சுந்தரம் மறுநாள் காலை வந்து மனுக்களை வாங்கிச் செல்லுமாறு கூறினார். அதன்படி 60 பேரும் நேற்று காலை 9 மணிக்கு ஆர்.ஐ., அலுவலகத்திற்கு வந்தனர். அதற்கு முன்பாக ஆர்.ஐ., காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். வெகுநேரம் ஆகியும் ஆர்.ஐ., வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆர்.ஐ., அலுவலகம் முன் தர்ணா செய்தனர். தகவலறிந்த ஆர்.ஐ., சுந்தரம் மாலை 3 மணிக்கு ஸ்ரீமுஷ்ணத்திற்கு வந்து, சான்றிதழில் கையெழுத்திட்டு கொடுத்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior