உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 17, 2010

நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணத்தில் ஏரி ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

நெல்லிக்குப்பம் : 

            ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி தூர் வார சென்றவர்களை ஆக்கிரமிப்பா ளர்கள் தடுத்ததைக் கண் டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

            நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணத்தில் உள்ள ஏரியை பலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தூர் வாரி ஆழப்படுத்த கடந்தாண்டு 26 லட்சம் ரூபாய் நிதி ஒதுக் கப்பட்டது. ஏரியில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்ற ஆக்கிரமிப்பாளர் கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஓராண் டாக ஏரி சீரமைக்கப்படவில்லை.

               ஏரியை சீரமைக்காவிட்டால் ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள், வருவாய் துறை பதிவேட்டில் உள் ளபடி 2.5 ஏக்கர் பரப் பளவு ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகளை கடந்த வாரம் அகற்றினர். அதனைத் தொடர்ந்து நேற்று ஏரியை தூர் வாரும் பணிக்கு அதே பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சென்றனர். அவர்களை ஏரியை ஆக்கிரமித்திருந்த ஆளுங்கட்சியினர் விரட்டினர்.

             ஆத்திரமடைந்த மக்கள் கடலூர் - பாலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர் களை இன்ஸ்பெக்டர் பாண்டியன் சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் 2.5 ஏக்கரில் மட்டும் தூர்வாருவது சரியில்லை. முறையாக அளவீடு செய்து முழு ஏரியையும் தூர் வார வேண்டும் என ஏரியை ஆக்கிரமித்திருந்தவர்கள் கூறினர்.

                  அதற்கு அதிகாரிகள் வருவாய்துறை பதிவேட்டில் ஏரி 2.5 ஏக்கர் மட்டுமே உள்ளது. முதலில் அதை தூர்வாரலாம். பழைய கணக்கை பார்த்து கூடுதலாக இருந் தால் அதையும் தூர்வார நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஒரு வழியாக 4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் ஏரி தூர் வாரும் பணி துவங்கியது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior