உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 17, 2010

சாலையை சரி செய்யாததை கண்டித்து விருத்தாசலத்தில் திடீர் சாலை மறியல்

விருத்தாசலம் : 

             விருத்தாசலத்தில் காட்டுகூடலூர் சாலையை சரி செய்யாததைக் கண் டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

             விருத்தாசலத்தில் இருந்து காட்டுக்கூடலூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாகி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதில் புதிய சாலை அமைக்க டெண்டர் விட்டு ஜல்லிகள் கொட்டி 6 மாதமாகியும் சாலை போடும் பணி துவங்கவில்லை. இதனால் அந்த சாலையில் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

               இதனால் ஆத்திரமடைந்த விருத்தாசலம் அண்ணாநகர், திரு.வி.க., நகர், தாஷ்கண்ட் நகர் பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் நேற்று காலை 11 மணிக்கு கடலூர் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் நாகராஜன் ஆகியோர் விரைவில் சாலை போடப்படும் என உறுதியளித்தனர். அதனையேற்று மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கடலூர் ரோட்டில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior