உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 17, 2010

டெல்டா வாய்க்கால் புனரமைப்பு பணி: கண்காணிப்பு குழு அமைக்க வலியுறுத்தல்

கடலூர் : 

            காவிரி டெல்டா பாசனப் பகுதியில் நடைபெறவுள்ள புனரமைப்பு பணிகள் முறையாக நடந்திட கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என விவசாயிகள் குறை கேட்புக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                விவசாயிகள் மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் கடலூரில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், கலெக்டர் உதவியாளர் (விவசாயம்) மணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் கார்மாங்குடி வெங்கடேசன் பேசுகையில், 

            திட்டக்குடி பகுதியில் பொதுப்பணித்துறை குளங்களை மழைக் காலத்திற்குள் தூர் வார வேண்டும். வெலிங்டன் ஏரியில் 2 ஆண்டாக நீர் பிடிப்பு இல்லாததால் மின் மோட்டாரை கொண்டு விவசாயம் செய்திட தினசரி 14 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும். பூச்சிக் கொல்லி மருந்துகள் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க விவசாயிகளை கொண்டு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்றார்.

பாசிமுத்தான் ஓடை பாசன விவசாய சங்க தலைவர் ரவீந்திரன் பேசுகையில், 

              கடந்த 2006-07ம் ஆண்டு காவிரி படுகை பாசன வாய்க்கால்களை புனரமைக்க அரசு 400 கோடி ஒதுக்கீடு செய்தது. அதில் கடலூர் மாவட்டத்தில் தற்போது 4 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடக்கவுள்ளது. பணிகள் முறையாக நடக்க விவசாயிகளை கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும்.

           சிதம்பரம் பகுதியில் கிடங்கு அமைத்து உளுந்து கொள்முதல் செய்ய 5 லட்சம் அரசு அனுமதித்துள்ளது. இதற்கு உள்ளூர் வியாபாரிகள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். எனவே அரசு நடவடிக்கை எடுத்து இந்தாண்டு உளுந்து பயிர் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கொள்ளிடம் கரையை பலப்படுத்த அணைக்கரை முதல் பெராம்பட்டு வரையிலான 62 கி.மீட்டர் தூரத்திற்கு கரையின் அடிப்பகுதியில் 45 மீட்டர் அகலமும், மேல் பகுதியில் 18 மீட்டர் அகலமும், தற்போது உள்ள உயரத்தை விட ஒன்றரை மீட்டர் உயர்த்தி அதன் மீது தார் சாலை அமைக்க 108 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

              இதற்கு தேவையான மண்ணை பெரம்பலூர் மாவட் டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் வீராணம் ஏரியிலிருந்து எடுத்து பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணி பல்வேறு நபர்களிடம் டெண்டர் விடவுள்ளதாக தெரிகிறது. பணிகள் சிறப்பாக நடக்க ஒரே நிறுவனத்திடம் (குளோபல் டெண்டர்) விடவேண்டும் என்றார்.

சேத்தியாதோப்பு அணைக் கட்டு பாசன விவசாயி விஜயகுமார் பேசுகையில், 

                 வண்டுராயன்பட்டு பகுதியில் உடைந்துள்ள மானம்பாத்தான் வாய்க்காலை சீரமைக்க கலெக்டர் நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior