உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 17, 2010

நெய்வேலி ஜவகர் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

நெய்வேலி : 

             நெய்வேலி ஜவகர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த போன் தகவலை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினர்.

              நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 17ல் இயங்கி வரும் ஜவகர் மெட்ரிக் பள்ளி முதல்வர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு போன் வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இரவு 12 மணிக்குள் வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். போன் தகவலைக் கேட்டு திடுக்கிட்ட பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் தகவலின் பேரில், டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் இரவே பள்ளியை முழுமையாக சோதனை செய்தனர். வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து நேற்று வழக்கம் போல் பள்ளி இயங்கியது.

               இந்நிலையில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் ஏட்டு ராமலிங்கம் தலைமையிலான வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் நேற்று பகல் 2 மணிக்கு பள்ளியில் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்து வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதையும், போன் தகவல் புரளி என்பதையும் உறுதி செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior