உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 4.56 கோடி மானியம் விடுவிப்பு: சீத்தாராமன்

கடலூர்: 

            கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4.56 கோடி ரூபாய் அரசு மானியத் தொகையை விடுவித்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
 
           ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு தன் சொந்த வருவாயிலிருந்து குறிப்பிட்ட தொகையை மாநில நிதிக் குழு மானியமாக வழங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 2010 மாதத்திற்கானது மாநில நிதிக்குழு மானியம் மாவட்ட ஊராட்சிக்கு 10 லட்சத்து 2 ஆயிரத்து 429 ரூபாயும், 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 95 லட்சத்து 56 ஆயிரத்து 9ம், 681 கிராம ஊராட்சிகளுக்கும் 3 கோடியே 47 லட்சத்து 98 ஆயிரத்து 718 ம் ஆக 4 கோடியே 56 லட்சத்து 57 ஆயிரத்து 156 ரூபாயும் விடுவித்து வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளைப் பொறுத்தவரை மேற்கண்ட தொகையிலிருந்து ஊராட்சி நிர்வாக செலவிற்காக ஊராட்சி நிதி கணக்கு எண் 1க்கு 2 கோடியே 48 லட்சத்து 34 ஆயிரத்து 741 ரூபாயும், மின்கட்டணம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு குடிநீர் கட்டணம் செலுத்துதல் செலவிற்காக, ஊராட்சி நிதி கணக்கு எண் 2க்கு 99 லட்சத்து 63 ஆயிரத்து 977 ரூபாயும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

                    எனவே மாவட்ட ஊராட்சி அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் பணியாளர்களுக்கு ஊதியம் நிலுவையின்றி வழங்கிய பின் தங்கள் பகுதிகளில் தேவையான குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் எடுத்து செய்ய வேண்டும்.  ஊராட்சி பணியாளர்களுக்கு முழுமையாக ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்குதல், நூலக வரித்தொகை நூலக ஆய்வுக்குழுவிற்கு செலுத்தப்பட வேண்டும். ஊராட்சி பணியாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்ட சந்தா, பங்குத் தொகை கட்டப்பட வேண்டும். ஊராட்சி பணிகளில் பிடித்தம் செய்து நிலுவையில் உள்ள பல்வேறு வரியினங்களை உரிய தலைப்பில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior