உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

தமிழகத்தில் 7.44 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா

கடலூர்: 

             தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 44 ஆயிரத்து 87 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை செயலர் தனவேல் கூறினார்.
 
கடலூரில் வருவாய்த்துறை செயலர் தனவேல் கூறியதாவது:

              வருவாய்த்துறை பணிகளை மேம்படுத்த மாவட்ட அளவில் இன்று (நேற்று)  ஆய்வு மேற் கொள்ளப்பட் டது.  வி.ஏ.ஓ., க்களுக்கான பணி பளுவை குறைத்து பொது மக்கள் கொடுக்கக் கூடிய மனுக் கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக கம்ப்யூட் டர் மயமாக்கும் முறையை கொண்டு வந்துள்ளோம். அடுத்த கட்டமாக குறுவட்டம் அளவிலும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 12,300 வி.ஏ.ஓ., க்களுக்கு அரசு குடியிருப்பு கட்டி தரப்பட் டுள்ளது. 

             நில அளவைத் துறையில் 725 சர்வேயர் பணியிடங்களை நிரப்ப அரசு ஆணை விரைவில் பிறப்பிக்க உள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய நில பதிவேடுகள் கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டம் முலம் தாசில் தார் அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம் கம்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக  41.3  கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜூன் 30ம் தேதி வரை தமிழகத்தில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 390 பேருக்கு 2 லட் சத்து 12 ஆயிரத்து 268 ஏக் கர் இலவச நிலப்பட்டாவும், 7 லட்சத்து 44 ஆயிரத்து 87 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.

                தமிழ்நாடு விவசாயம் மற்றும் விவசாய தொழிலாளர் நல வாரியம் மூலம் 75 லட்சத்து 93 ஆயிரத்து 769 பேருக்கு  அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பேரிடர் தடுப்பு மேலாண்மை திட்டம் மூலம் 14 புதிய பாதுகாப்பு மையங்கள் 19.04 கோடியில் கட்டப்பட உள்ளது. மேலும் 9.45 லட்சம் மதிப்பில்  21 புதிய இயற்கை இடற்பாடு முன்னெச்சரிக்கை மையங்கள் அமைக் கப்படவுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior