உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

சுரங்கப்பாதைக்கு டெண்டர்: நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை

கடலூர்:

            கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை விரைவில் டெண்டர் விடவேண்டும் எனக்கோரி, கடலூர் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் மனு அளிக்கப்பட்டது.

 கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: 

                 கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்துக்கு ரயில்வே இலாகா சார்பில் டெண்டர் விடப்பட்டுவிட்டது. ரயில்வே துறைப் பணியும் நெடுஞ்சாலைத் துறை பணியும் ஒரே நேரத்தில் நடைபெற்றால்தான், மக்களுக்குப் பயனுள்ளதாகவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் சிரமம் இல்லாமலும், விரைவில் பணி நிறைவடையவும் வசதியாக இருக்கும். நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விடுவதில் தாமதம் ஆவதால், நகராட்சி மற்றும் மின்வாரியம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே விரைவில் டெண்டர் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior