உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 16, 2010

சிதம்பரம் நகரில் மக்களை அச்சுறுத்திய 15 அடி நீள முதலை


சிதம்பரம் நகரை கடந்து செல்லும் பாலமான் ஆற்றில் புதன்கிழமை பிடிப்பட்ட 15 அடி நீள முதலை.
 
சிதம்பரம்:

            சிதம்பரம் நகரில் மக்களை அச்சுறுத்திய 15 அடி நீள ஆண் முதலை புதன்கிழமை பிடிபட்டது. சிதம்பரம் நகரை கடந்து செல்லும் பாலமான் வாய்க்காலில் குளிக்கச் சென்றவர்களை முதலை ஒன்று அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனச்சரகர் விஜயன் மேற்பார்வையில் நந்திமங்கலத்தைச் சேர்ந்த ராஜு தலைமையில் முதலை பிடிக்கும் குழுவினர் புதன்கிழமை 5 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அந்த முதலையை பிடித்தனர். முதலை 15 அடி நீளமும், 800 கிலோ எடையும் இருந்தது. பிடிபட்ட முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்தேக்க குளத்தில் வனத்துறையினர் கொண்டு விட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior