உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 16, 2010

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து 20 முதல் ஸ்டிரைக்

நெய்வேலி:

                   என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், செப்டம்பர் 20-ம் தேதி இரவுப் பணிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

                    சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் என்எல்சி நிர்வாகத்திடம் ஆகஸ்ட் 19-ல் வேலைநிறுத்தக் கடிதம் அளிக்கப்பட்டது.இதையடுத்து இம்மாதம் 2-ம் தேதி புதுச்சேரியில் உதவி தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.  இதைத்தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் முடிவுசெய்து, அதுபற்றி விவாதிக்க சங்க பேரவைக் கூட்டத்தை செப்டம்பர் 14-ல் நெய்வேலி வட்டம் 24-ல் உள்ள ஏஐடியுசி தொழிற்சங்க வளாகத்தில் கூட்டியது.

                          இக் கூட்டத்தில், "புதுச்சேரியில் உதவித் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் வியாழக்கிழமை (செப். 16) நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது என்றும், பேச்சுவார்த்தையில் நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப் போக்கை கடைபிடித்தால் 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது' எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior