உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 16, 2010

கடலூர் மாவட்டத்தில் 223 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

கடலூர்: 

                கடலூர் மாவட்டத்தில் 223 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் நேற்று பணி நியமன ஆணை வழங்கினார். தமிழகத்தில் அரசு பள் ளிகளில் காலியாக உள்ள 6,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு அறிவித்தது. அதன் படி கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 

                    நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள்  நிரப்பப்படாமல் இருந்து. இந்நிலையில் நேற்று கடலூரில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கப்பட்டது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயா ஆங்கிலம் 64,  கணிதம் 46, அறிவியல் 112, என மொத்தம் 223 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior