உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 16, 2010

சிதம்பரம் அருகே வாய்க்காலில் டவுன் பஸ் கவிழ்ந்து 28 பேர் படுகாயம்

சிதம்பரம்:

                           சிதம்பரம் அருகே கீழ்நத்தம் கிராமத்தில் புதன்கிழமை அரசு டவுன் பஸ் ஒன்று வாய்க்காலில் கவிழ்ந்து 2 பள்ளி மாணவியர்கள் உள்ளிட்ட 28 பேர் படுகாயமடைந்தனர் சேத்தியாத்தோப்பிலிருந்து சிதம்பரம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ் கீழ்நத்தம் கிராமம் அருகே வந்த போது அச்சு முறிந்து தறிகெட்டு ஓடி அருகில் உள்ள கருங்காலி வாய்க்காலில் கவிழ்ந்தது.இவ்விபத்தில் நடத்துநர் குழந்தைவேல் (38), பள்ளி மாணவிகள் பிரேமா (17), ஆர்த்தி (13) ஆகிய இருவர் உள்ளிட்ட 28 பேர் படுகாயமடைந்தனர்.

                      தகவல் அறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர் அ.ராமராஜூ, வட்டாட்சியர் எம்.காமராஜ் ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்துக்குச் சென்று பஸ்ஸிலிருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior