உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 16, 2010

அண்ணா பிறந்த நாள்: கடலூரில் 4 சிறைக் கைதிகள் விடுதலை

கடலூர்:

               அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரசு உத்தரவின் பேரில், கடலூர் மத்திய சிறையில் இருந்து புதன்கிழமை விடுதலையான 4 பேரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

                   கடலூர் மத்திய சிறையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேவராயன் (71), நாகை மாவட்டம் வேதாரண்யம் முருகையா (78), அதே ஊர் சுப்பிரமணியன் (75), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பக்கிரிசாமி (88) ஆகியோர் புதன்கிழமை காலை 7 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.சிறையில் இருந்து வெளியான இவர்கள் சிறைச் சாலைக்கு வெளியே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்தினர். 4 பேரும் கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள். 

கடலூர் மத்திய சிறையில் இருந்து கடலூர் மத்திய சிறையில் இருந்து அவர்கள்  கூறுகையில், 

                      விடுதலை செய்யப்பட்டதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றனர்.தங்களுடன் தண்டனை பெற்ற தங்கள் மகன்கள் மற்றும் உறவினர்களும் சிறையில் உள்ளனர். அவர்களையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior