உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 13, 2010

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட திருமணம்



கடலூர் திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால், கடலூர் - பண்ருட்டி (பாலூர் வழி)

கடலூர்:

                         கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட திருமணம் நடைபெற்றன. திருமணத்துக்கு வந்தவர்கள் மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டம் காரணமாக, அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கூட்டத்தில் சிக்கி மணமக்கள் கூட, வெளியே வர முடியாமல் தவித்தனர். 

                     கடலூரை அடுத்துள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் இங்கு வருவது வழக்கம்.  திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் திருமணம் செய்து கொள்வதாக பலர் வேண்டுதல் செய்து கொள்வதால், முகூர்த்த நாள்களில் இங்கு அதிக எண்ணிக்கையில் திருமணம் நடப்பது வழக்கம். ஒரே நாளில் 100 திருமணம் கூட நடந்து இருக்கின்றன. ஆனால் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட திருமணம் நடைபெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது. 

                     இதனால் சிறிய ஊரான திருவந்திபுரம் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் மற்றும் வாகன நெரிசலில் திக்குமுக்காடியது. பல்வேறு ஊர்களிலும் இருந்து வந்திருந்த மணமக்களுக்கு, அதிகாலை 3 மணி முதல் முற்பகல் 11 மணி வரை 150-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்து முடிந்தன.  மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கோயிலுக்குத் தரிசனத்துக்காக வந்தவர்கள் மற்றும் அவர்களின் வாகனங்களால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. திருவந்திபுரம் கிராமத்துக்குள் எங்கு நோக்கினால் மணமக்கள் தென்பட்டனர்.  திருமண வீட்டார் மற்றும் திருமணத்துக்கு வந்தவர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், திருவந்திபுரத்துக்குள் உள்ள சாலைகள், பிரதானச் சாலையில் இருந்து திருவந்திபுரம் செல்லும் இணைப்புச் சாலை, கடலூர் -பண்ருட்டி (பாலூர் வழி) மாநில நெடுஞ்சாலை ஆகியவற்றில் காலை 8 மணிமுதல் பகல் 12 மணி வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது.

                        கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் வாகனங்கள் அனைத்தும் நெல்லிக்குப்பம் வழியாகத் திருப்பி விடப்பட்டன.÷அதிகாலையில் திருமணம் முடித்த மணமக்கள் திருவந்திபுரத்தை விட்டு வெளியேறுவதிலும், தாமதமாக வந்த மணமக்கள் உரிய நேரத்தில் கோயிலுக்குச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது.  இத் திருமணங்களால் திருவந்திபுரத்தில் உள்ள பல வீடுகள் ஹோட்டல்களாக மாறியிருந்தன. பல திருமணங்களுக்கு வீடுகளில் சிற்றுண்டி தயாரித்து வழங்கப்பட்டது.  திருமணத்துக்கு வந்த நண்பர்கள், உறவினர்கள் தாங்கள் சந்திக்க வேண்டிய மணமக்களை தேடி அலைய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. கோயிலில் ஒரே நேரத்தில் சுமார் 30 திருமணங்களை மட்டுமே நடத்தலாம். இதனால் ஒரு ஜோடிக்கு திருமணம் நடக்கும்போதே, மற்றொரு ஜோடி அருகிலேயே திருமணத்துக்காக காத்து நிற்கும் நிலையும் ஏற்பட்டது.

இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 

                     இந்த ஒரு மாதத்தில் மட்டும் 500 திருமணங்கள் இங்கு நடைபெற்று உள்ளன. இங்கு திருமணம் செய்து கொள்ள விரும்புவோர் முன்னரே தெரிவித்து, படிவம் பூர்த்திசெய்து கொடுத்து, பதிவு செய்து கொள்ள வேண்டும். திருமணம் நடைபெறும்போதும் மணமக்கள் மற்றும் சாட்சிகள் கோயில் பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். ஆவணி மாதத்தில் கடைசி முகூர்த்தம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை 150-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன.  அதிக எண்ணிக்கையில் திருணங்கள் நடந்ததால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண  1 கோடி செலவில் கேப்பர் மலை மீது திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி ஜனவரியில் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு கோயிலுக்குள் திருமணம் அனுமதிக்க மாட்டோம்.

                            பக்தர்கள் சிரமமின்றி வந்து போகலாம்.  எனினும் திருவந்திபுரத்துக்குள் வரும் சாலை ஒருவழிப் பாதையாக உள்ளதே நெரிசலுக்குக் காரணம். மாற்று வழி ஒன்றை ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உள்ளோம். கோயிலுக்கு ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior