உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 13, 2010

கிள்ளை-பரங்கிப்பேட்டை குறுக்கே ரூ. 24 கோடியில் கட்டப்பட்ட பாலம் 14-ல் திறப்பு

சிதம்பரம்:

                           கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை-பரங்கிப்பேட்டை இடையே வெள்ளாற்றின் குறுக்கே ரூ.23 கோடியே 67 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் திறப்பு விழா வருகிற செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) காலை 10 மணிக்கு பரங்கிப்பேட்டையில் நடைபெறுகிறது. 

                    நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் தலைமை வகிக்கிறார். உயர்மட்ட பாலத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்துப் பேசுகிறார். மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வரவேற்கிறார். சென்னை நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் தலைமைப் பொறியாளர் வி.அ.சண்முகநாதன் திட்ட விளக்கவுரையாற்றுகிறார். நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுமுகங்கள் துறை செயலாளர் கோ.சந்தானம் முன்னிலை வகிக்கிறார். பாலம் கட்டும் பணி 2007-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது. தற்போது கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளது. 

                      இதுவரை பரங்கிப்பேட்டை பகுதி மக்கள் சிதம்பரத்துக்கு வருவதற்கு பி.முட்லூர், புவனகிரி வழியாக சுற்றி சிதம்பரம் வந்து கொண்டிருந்தனர். தற்போது பரங்கிப்பேட்டையிலிருந்து நேரடியாக கிள்ளை வழியாக சிதம்பரத்துக்கு வந்துவிடலாம். இதனால் பரங்கிப்பேட்டை-சிதம்பரம் நகருக்கு வர்த்தகம் பெருக வாய்ப்புள்ளது. மேலும் அண்ணாமலைப் பல்கலையின் கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் பரங்கிப்பேட்டையில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து அம்மையத்துக்கு இதுவரை புவனகிரி, பி.முட்லூர் வழியாக மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் சென்று வந்தனர். தற்போது அவர்களும் குறைந்த நேரத்தில் செல்ல முடியும் என்பதால் பொதுமக்களும், மாணவர்களும், மீனவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior