உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 13, 2010

கடலூர் மக்களைக் கவர்ந்த 58 கிலோ லட்டுப் பிள்ளையார்

கடலூர்:

                      கடலூரில் தனியார் இனிப்புக் கடையில் தயாரித்து வைத்து இருந்த, 58 கிலோ லட்டுப் பிள்ளையார் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. ராஜஸ்தானைச் சேர்ந்த ரமேஷ் (48) மற்றும் அவரது உறவினர்கள் விஜய், வினய் ஆகியோர் கடலூரில் கடந்த 20 ஆண்டுகளாக இனிப்பு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். கடலூர் திருப்பாப்புலியூர் பகுதியில் இனிப்புக் கடை நடத்தி வரும் அவர்கள், விநாயகருக்குப் பிரியமானது லட்டு என்ற ஐதீகம் காரணமாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 58 கிலோ எடை கொண்ட லட்டைத் தயாரித்து உள்ளனர். 

                      கடந்த 8 ஆண்டுகளாக இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மிகப்பெரிய லட்டைத் தயாரித்து, பொதுமக்கள் பார்வைக்கு வைத்து வருகிறார்கள். 50 கிலோ எடையில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிலோ வீதம் எடையை அதிகரித்து, இந்த ஆண்டு 58 கிலோ எடைகொண்ட லட்டைத் தயாரித்து உள்ளனர். இந்த லட்டு விற்பனைக்கு அல்ல. விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, மூன்றாம் நாள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டுவிடும் என்றும் ரமேஷ் தெரிவித்தார். 58 கிலோ எடை லட்டை, 8 பேர் 3 நாள்கள் இரவு பகலாக பணிபுரிந்து தயாரித்து உள்ளனர். 20 கிலோ கடலை மாவு, 18 கிலோ சர்க்கரை, 10 கிலோ எண்ணெய், 5 கிலோ நெய், 3 கிலோ முந்திரிப் பருப்பு, 2 கிலோ திராட்சை, மற்றும் ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் இதில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior