உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 29, 2010

நெய்வேலியில் கல்லூரி மாணவி கற்பழித்துக் கொலை?

நெய்வேலி:

                  நெய்வேலியில் கல்லூரி மாணவியை கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். நெய்வேலியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் தனது நெய்வேலி வட்டம் 24-ல் உள்ள டிராக்டர் வீதியில் வசிக்கும் ரட்சகர் எனும் ஒப்பந்ததாரர் வீட்டின் பக்கவாட்டில் தனியாக ஷெட் அமைத்து தனது மனைவி, மகள் சுபாஷினி (20) ஆகியோருடன் வசித்து வந்தார்.

                  சுபாஷினி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சுபாஷினி, புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது ஒப்பந்ததாரர் ரட்சகர், சுபாஷினியைக் கற்பழித்து, கெரசின் ஊற்றி தீவைத்துக் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் சுபாஷினி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதையறிந்த நடுக்குப்பம் கிராம மக்கள் ரட்சகர் வீட்டின் முன் திரண்டு, ரட்சகர் பயன்படுத்திய வாகனத்தை சேதப்படுத்தினர். 

                       பின்னர் கடலூர் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் டிஎஸ்பி மணி ஆகியோர் குற்றவாளியாகக் கூறப்படும் ரட்சகரின் மனைவி ஜான்சிராணியை கைது செய்திருப்பதாகவும், தலைமறைவாக இருக்கும் ரட்சகரை இரவுக்குள் கைது செய்வோம் என சமாதானம் செய்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

1 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior