உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 29, 2010

விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் சாலையில் தேங்கும் மழை நீர் நீந்தி செல்லும் வாகனங்கள்

விருத்தாசலம் :

                 விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் நேற்று திடீரென பெய்த மழைநீர் சாலையில் குளம்போல் தேங்கி நின்றன. விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் பஸ்நிலையம் அருகே ரோட்டின் குறுக்கே சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் சில மாதங்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டதால் சாக்கடை நீர் தேங்கியது. இதனால் கால்வாயை தோண்டி அடைப்பை சரிசெய்து கிராவல் மண் கொண்டு மூடினர். 

                     ரோட்டின் உயரத்தை விட உயரமாக கிராவல் கொட்டி மூடியுள்ளதால் அந்த இடம் வேகத்தடை அமைத்தது போல் உள் ளது. இதனால் மழை நீர் வடிய வழியில்லாமல் அந்த பகுதியில் தேங்கி நிற்கிறது. நேற்று மதியம் பெய்த கனமழையால் அந்த பகுதி குளம் போல் காட்சியளித்தது.  இதில் வாகனங்களை ஓட்டி செல்லமுடியாமல் டிரைவர்கள் சிரமப்பட்டனர்.  அதுபோல் கடலூர் ரோட்டில் ஸ்டேட் பாங்கில் இருந்து பாலக்கரை வரை மழைநீர் தேங்கியது. பிரதான சாலைகளில் மழை நீர் தேங்காமல் வடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior