உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 18, 2010

கடலூர் அரசுப் பள்ளிக்கு ரூ.6 லட்சத்தில் கழிப்பறைகள் திறப்பு

கடலூர்:

               கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு லண்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் இகோ-சான், ரூ.6 லட்சத்தில் கட்டிக் கொடுத்துள்ள கழிப்பறைகள் திறப்பு விழா திங்கள்கிழமை நடந்தது.

               லண்டன் இகோ-சான் நிறுவனம் கடலூர் பிளஸ் தொண்டு நிறுவனத்தின் மூலமாக மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளது. மாணவர்களுக்கு தலா 40-க்கும் மேற்பட்ட நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, மாணவர்களுக்கான கழப்பறைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி திறந்து வைத்தார்.

                 மாணவிகளுக்கான கழிப்பறைகளை இகோ-சான் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி மெக்கிராத் மற்றும் பிளஸ் தொண்டு நிறுவனத்தின் வெயரவர் நீட்ஸ் அமைப்பின் பிரதிநிதி டேவிட் கிராஸ்வலர் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி.சுப்பிரமணியன் வரவேற்றார். ஆசிரியர் எம்.ஸ்ரீதர், ஆசிரியை ஜே.எஸ். ஹெலன் ஆகியோர் நன்றி கூறினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior