உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 18, 2010

கத்தரியில் காய்ப்புழுவைத் தடுக்கும் முறை


                 கத்தரியில் தற்போது பரவிவரும் காய்ப்புழுவை தடுத்து மகசூலை பெருக்குவது எப்படி என்று தோட்டக்கலைத் துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி விவசாயிகள் பயன்பெறலாம்.
 
                   கத்தரி இந்தியாவை தாயகமாகக் கொண்ட பயிராகும்.  இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று |15 வரை விற்பனை செய்து வந்த விவசாயிகள் கடந்த இரண்டு மாதமாக நிலவிய குறைந்த சந்தை விலையின் காரணமாக கத்தரி தோட்டங்களை போதிய பராமரிப்பின்றி வைத்திருந்த காரணத்தால் தண்டு மற்றும் காய்த்துளைப்பான் தாக்குதல் பரவலாக தென்பட்டு மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் கூடுதல் விலை கிடைப்பதால் கத்தரியில் கூடுதல் மகசூல் பெறுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 
கைவினை முறைகள்: 
 
            பாதிக்கப்பட்ட குருத்துப் பகுதி மற்றும் தண்டுப் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும், செடிகளில் தோன்றும் காய்ப்புழுக்களை ஆள்கள் மூலம் சேகரித்து அழிக்கலாம். அந்த வேளையில் வயலில் விளக்குப் பொறிகள் அமைப்பதன் மூலம் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
 
உழவியல் முறைகள்: 
 
                 தொடர்ந்து கத்திரி சாகுபடி செய்வதை தவிர்ப்பதன் மூலம் இந்த பூச்சியினை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். குட்டையான மற்றும் நீளமான காய்கள் கொண்ட ரகங்களை தேர்வு செய்து நடவு செய்வதால் கத்தரிக்காய் துளைப்பான் தாக்குதலை சமாளிக்கலாம். கத்திரி வயலைச் சுற்றிலும் இரு வரிசைகளில் மக்காச்சோளம் பயிரை பொறி பயிராக சாகுபடி செய்து காய்த்துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். தோட்டத்தைச் சுற்றிலும் உள்ள காய்துளைப்பானுக்கு இலக்காகும் கத்தி குடும்ப களைகளை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் பூச்சிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
 
உயிரியல் முறைகள்: 
 
                       பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை ஏக்கருக்கு 1500 மி. லிட்டரை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். பெவேரியா பேசியானா உயிரியல் காரணியினை ஒரு லிட்டர் நீருக்கு 3 மி.லி. வீதம் கலந்து தெளித்து இந்தப் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் ஹெக்டேருக்கு 5000 எண்கள் கத்தரி நடவு செய்த மூன்றாம் மாதம் முதல் வயல்களில் விட்டு இந்த பூச்சியினை கட்டுப்படுத்தலாம். இனக் கவர்ச்சி பொறிகள் ஒரு ஹெக்டேருக்கு 12 எண்கள் வீதம் உபயோகப்படுத்தி ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிப்பதன் மூலம் இப்பூச்சியை கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம்.
 
ரசாயன முறைகள்: 
 
                    எண்டோசல்பான் 35 இசி மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. வீதம் கலந்து இத்துடன் 3 மி.லி. வேப்ப எண்ணெய் கலந்து ஒரு டேங்குக்கான திரவத்துடன் 5 மி.லி. டீப்பால் ஒட்டும் திரவம் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளித்து இந்த பூச்சியினை கட்டுப்படுத்தலாம். மாலத்தியான் 50 இசி மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி. வீதம் கலந்து தெளிப்பதன் மூலமும் இந்தப் பூச்சியை கட்டுப்படுத்தலாம் என்று தோட்டக்கலைத் துறை பரிந்துரை செய்துள்ளது.
 
                     கத்தரி காய்த்துளைப்பானை கட்டுப்படுத்தும் போது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகளை (உழவியல், உயிரியல், கைவினை, ரசாயன முறைகள்) கையாண்டு கத்தரிக் காய்த்துளைப்பான் மேலாண்மை செய்யலாம். மேலும் கத்தரிக்கு ரசாயன பூச்சிக்கொல்லி உபயோகப்படுத்தும்போது பரிந்துரை செய்த அளவுகளில் சரியான அளவில் நீர் கலந்து உரிய இடைவெளியில் தெளித்தால் நல்ல பலனை பெறலாம்.
 
    

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior