உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 18, 2010

சத்துணவுத் திட்டத்தில் குறைகள் இருப்பின் புகார் தெரிவிக்கலாம்

கடலூர் : 

               சத்துணவுத் திட்டத்தில் குறைகள் இருப்பின் குழுவிடம் புகார் தெரிவிக்கலாம்.

கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: 

                  சத்துணவு மையங்கள் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள், மனுக்கள் மீது நடவடிக்கை மேற் கொள் ளும் பொருட்டு மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக் கள் அமைத்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

குறைகள் பற்றிய தகவல் பெற்று பதிவு செய்யும் அலுவலராக நியமிக்கப்பட்ட உதவி கணக்கு அலுவலர் (சத்துணவு) தொலைபேசி எண் 04142-295452.

                      மாவட்ட அளவிலான குறை களைவு குழுவாக, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட திட்ட அலுவலர், உதவி கணக்கு அலுவலர் மற்றும் வட்டார அளவிலான குறை களைவு குழுவாக, வட் டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் திட்டம் தொடர்பான தங் கள் குறைகளை மேற் கண்ட குழுவினரிடம் தெரிவிக்கலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior